புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள சூழலில், அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து சமூக செயற்பாட்டாளர் சிராஜ் மஷுர் தனது முகப்புத்தகத்தில் முக்கியமான சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து சில கருத்துகளைப் பகிர்வது அவசியம். நாட்டிலுள்ள பள்ளிவாசல்களையும் பல கோடிகள் பெறுமதியான வக்ஃப் சொத்துகளையும் ஒழுங்குமுறைப்படுத்தும் உயரிய சபை இது.
இதன் விடயப் பரப்புக்குள் பல புதிய அணுகுமுறைகளும் மாற்றங்களும் தேவை.
பல இடங்களில் வக்ஃப் சொத்துகளை செல்வாக்குள்ள சிலர், முறைகேடாக கையகப்படுத்தியுள்ளனர்.
இவை மீட்கப்பட வேண்டும். இதற்கு சட்டத் திருத்தம் தேவையாயின் அதுவும் செய்யப்பட வேண்டும்.
அத்தோடு, கடந்த காலத்தில் இயங்கிய வக்ஃப் சபைகள் தொடர்பில், பல்வேறு குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் அடிக்கடி வெளிவந்த வண்ணமே இருந்தன.
இந்நிலையில் புதிய வக்ஃப் சபை நியமனத்தின்போது, பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
1. தகுதியான நபர்களை நியமிப்பதற்கு ஏற்ற தெரிவு அளவுகோல் (Selection Criteria) ஒன்று வகுக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, குறைந்தபட்சம் ஒரு மார்க்க அறிஞர், ஒரு சட்டத்தரணி, ஓய்வுபெற்ற நீதியரசர், கணக்காளர், மத்தியஸ்த அனுபவமுள்ளவர்/ பிணக்குத் தீர்ப்போர் (Experience in Mediation & Conflict Resolution) …
3.முஸ்லிம்களின் உள்ளக சிந்தனைப் போக்குகளை/ உள்ளகப் பன்மைத்துவத்தைப் பிரதிபலிப்போர்.
4.புவியியல் ரீதியாக பல பிரதேசத்தவர்கள் கலந்திருத்தல்.
