ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

Date:

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) இன்று (26) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்.

ரஷ்யாவின் எரிசக்தித் துறை பிரதி அமைச்சருக்கும், இலங்கையின் நிதித்துறை பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவுக்கும் இடையே இன்று கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ரஷ்ய பிரதி அமைச்சர் இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்க உள்ளார்.

இலங்கை தனது எரிசக்தி நெருக்கடியைக் கடந்து செல்ல உதவும் வகையில், இந்தச் சந்திப்புகளின் போது பல கலந்துரையாடல்களும் உடன்படிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தொடர்புடைய கலந்துரையாடல்களுக்குப் பின்னர், அவர் நாளை வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருடன் இரவு விருந்தில் கலந்துகொள்வார்.

எரிசக்தி பிரதி அமைச்சர் 28 ஆம் திகதி ரஷ்யாவுக்குப் புறப்பட உள்ளார்

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...