ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

Date:

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி, கல்வித்துறைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய கஹட்டோவிட்டவைச் சேர்ந்த திருமதி M.M.K. மௌபியா (Moufiya) அவர்கள் தனது ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

அவரது சிறப்பான சேவையைப் பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் இணைந்து நேற்றைய தினம் விசேட நன்றி நவிழல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிலையத்தில் இந்த நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரும், மௌபியா டீச்சர் அவர்கள் தனது கடமைக் காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு, ஆசிரியர்களுக்கு வழங்கிய வழிகாட்டல்கள் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டிப் பேசினர்.

கல்வித்துறையில் ஒரு முன்மாதிரி ஆளுமையாகத் திகழ்ந்த அவரது ஓய்வுக்காலம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய சக ஆசிரியர்கள் தமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஓய்வுபெறும் மௌபியா டீச்சரின் எதிர்கால வாழ்வு சிறக்க எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...