இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

Date:

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ‍தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தும் வளைகுடா வான்வெளி மீது தங்கள் படைகளுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகக் கூறி வரும் நிலையில், ஈரான் வான்பரப்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இன்னமும் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்தச் சம்பவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன.

இரு இருக்கைகள் கொண்ட முதல் அமெரிக்க F-15E ரக விமானம் ஈரானியத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இரண்டாவது விமானமான, A-10 வார்ஹொக் (Warthog) ரகப் போர் விமானம் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகி குவைத்தின் மீது விழுந்து நொறுங்கியதில், விமானி வெளியே குதித்ததாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் குறித்த விமானங்கள் ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானக் குழுவினருக்கு ஏற்பட்ட காயங்களின் அளவு தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம், காணாமல் போன F-15E விமானக் குழு உறுப்பினரை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

ஈரானின் தென்மேற்குப் பகுதியில் எதிரியின் விமானம் விழுந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியைத் தாங்கள் சல்லடை போட்டுத் தேடி வருவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

அதேநேரம், எதிரியின் படைகளை பிடிப்பவர்கள் அல்லது அவர்களை கொல்பவர்களுக்குப் பாராட்டு வழங்கப்படும் என்று பிராந்திய ஆளுநர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...

பெலாரஸில் அதிரடி: தன்பாலின ஈர்ப்பை ஆதரிப்பது இனி கிரிமினல் குற்றம்!

பெலாரஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசுவது...