அல் ஜசீரா முபாஷர் (Al Jazeera Mubasher) தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது விஷாஹ் (Mohammed Wishah), காசா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட “போர்நிறுத்த” உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், காசாவில் தொடர்ச்சியான மீறல்கள் அரங்கேறி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முகமது விஷாஹ்வின் மறைவைத் தொடர்ந்து, அக்டோபர் 2023 முதல் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 262 ஆக அதிகரித்துள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஊடக அமைப்புகளும் இந்தப் படுகொலையைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.
பத்திரிகையாளர்கள் திட்டமிட்டபடி இலக்கு வைக்கப்படுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என அவை சுட்டிக்காட்டியுள்ளன.
