பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து அதிகளவு பணம் செலவிடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான நிகழ்ச்சிகளை மிகவும் எளிமையான முறையிலும் குறைந்த செலவிலும் நடத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பெற்றோர்களுக்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தாத வகையில் செயற்படுவது அவசியமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பெற்றோர்களைப் பாதிக்காத வகையில் செயற்படுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
