இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முதல் குழுவினரை சவூதி அரேபியா உற்சாகமாக வரவேற்றுள்ளது.
மக்காவிற்கு வருகை தந்துள்ள இந்த முதல் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், துருக்கி மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் இடம்பெற்றுள்ளனர். விமான நிலையங்களில் இவர்களுக்குச் சவூதி அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்வது கட்டாயக் கடமையாகும்.
ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து பல மில்லியன் கணக்கான மக்கள் இந்த ஆன்மீகப் பயணத்திற்காக மக்காவில் ஒன்று கூடுகின்றனர்.
இந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கான தங்குமிட வசதி, போக்குவரத்து மற்றும் மருத்துவச் சேவைகளைச் சவூதி அரசு விரிவான முறையில் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
