இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்கள் குருநாகல், காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று (19) இரவு மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய, தெற்கு மாகாணங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
