அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களின் விபரங்களை, அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுள்ளது.
இது தொடர்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.
மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இது தொடர்பில் அறிவிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளை 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு 24 மணிநேரமும் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
