‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

Date:

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ (‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’) நூல் அறிமுக விழா இன்று 28, செவ்வாய்க்கிழமை  நடைபெறவுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜயசிங்க அவர்களால் தமிழ் மொழியிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல், கண்டி டி.எஸ். சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பதான சங்க மண்டபத்தில் மக்கள் மயப்படுத்தப்படவுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தலைமையில் இவ்விழா நடைபெறும். பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் ரோஹித தசநாயக்க சிறப்புரையாற்றுவார்.
நூலின் மூல ஆசிரியர் கலாநிதி ரவூப் ஸெய்ன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் கலாநிதி தம்மிக்க ஜயசிங்க ஆகியோர் நூல் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வர்.

மதங்களுக்கிடையிலான அமைதி அறக்கட்டளை (IRPF), கண்டி அகில இலங்கை முஸ்லிம் இளைஞர்  சங்கம் (YMMA) மற்றும் பஹன மீடியா உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று அடையாளத்தை சிங்கள வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...