இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

Date:

நாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சீரான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களினால் 676 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார்.

வீதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை விவரித்தார்.

வீதி விபத்துக்களினால் இவ்வாறு உயிரிழப்பு ஏற்படுவது கவலைக்குரியதாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோசமான சாலை நிலைமைகள், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை வீதி விபத்துக்களை ஏற்படுத்துவதற்கான பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2026 ஏப்ரல் 5 ஆம் திகதி நிலவரப்படி வீதி விபத்துக்களில் 230 பாதசாரிகளும் 247 மோட்டார் சைக்கிள் சாரதிகளும் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட...

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும்: IMF கணிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு,...

20 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல...