‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

Date:

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள நீதி மற்றும் சட்டப் போராட்டங்களை விவரிக்கும் ‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக விழா கொழும்பில் நடைபெறவுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்காத சூழலில், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து இந்த முக்கிய ஆவணத்தை சமர்ப்பிக்கின்றனர்.

Equity Publishers (pvt) Ltd. நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந் நிகழ்வு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் (Postal Headquarters Auditorium), மாலை 4.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸுஹைர் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

பிரதம அதிதியாக அருட்தந்தை மா. சக்திவேல், கலந்துகொள்வதோடு நூலாய்வை சிராஜ் மஷ்ஹூர் (ஆய்வாளர்) நிகழ்த்துவார். சிரேஸ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சிறப்புரையாற்றுவார்.

தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதிவின் வெளியீட்டு விழாவில் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...