தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

Date:

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வருவதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்திலிருந்த நிதி கட்டமைப்புகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் இனி முழுமையான இஸ்லாமிய நிதி முறை (Islamic Banking System) செயல்படுத்தப்படும் என்று அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய சட்டத்திற்கு முரணான வட்டி சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இருந்த பொதுவான வங்கி முறைகளுக்குப் பதிலாக, லாப-நஷ்டப் பகிர்வு அடிப்படையிலான இஸ்லாமிய ஒப்பந்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, நாட்டின் பொருளாதாரத்தை இஸ்லாமிய விழுமியங்களின்படி கட்டியெழுப்பும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என அரசு வர்ணித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் (Da Afghanistan Bank) கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக சர்வதேச இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் வங்கி நிபுணர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

“மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், சுரண்டலற்ற பொருளாதாரத்தை உருவாக்கவும் இந்த மாற்றம் அவசியம்,” என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தால் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு வணிகங்கள் மற்றும் சர்வதேச நிதித் தொடர்புகள் எத்தகைய தாக்கத்தை எதிர்கொள்ளும் என்பதை பொருளாதார வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் நாடு திரும்பினர்

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும்...