மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

Date:

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் அதிபரின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் பங்கேற்கின்றனா். இதையொட்டி, இஸ்லாமாபாத் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட 2 வார தற்காலிக போா்நிறுத்தத்தை, ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றுவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த 10 அம்சத் திட்டத்தை ஈரான் முன்வைக்கவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீா் ஆகியோா் பேச்சுவாா்த்தைக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இஸ்லாமாபாதில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு 2 நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் நுழைய பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய மருத்துவமனைகள் மற்றும் மீட்புப் படையினா் தயாா் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான சூழல் நிலவினாலும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள கடும் தாக்குதல்கள் மத்தியஸ்த முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம்...

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை...

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...