புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இன்று காலை (10) புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பேருந்து நிலையத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் திட்டமிட்ட குழுக்களின் செயல் என்றும் அவர் மேலும் கூறினார்.
பெண்கள் கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் முதல் நாளன்று கழற்றப்பட்டிருந்த நிலையில், அவை மீண்டும் பொருத்தப்பட்டன. எனினும், நேற்று (09) இரவும் இரண்டாவது முறையாக அக்குழாய்கள் கழற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதுடன், அதற்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
