மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷேக் முஹம்மது ஹசன் தத்தூ ஆகியோருக்கிடையில் கோலாலம்பூரில் விசேட சந்திப்பு.

Date:

தற்போது இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் சர்வதேச இஸ்லாமிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷேக் முஹம்மது ஹசன் தத்தூ ஆகியோருக்கிடையில் இன்று 23ஆம் திகதி கோலாலம்பூரில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் உலகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான நடுநிலை வகித்தல், முஸ்லிம் உலகில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறிப்பாக இச்சந்திப்பின் போது, கலந்துரையாடல் மற்றும் நடுநிலை வகித்தல் போன்ற பணிகளை மென்மேலும் பலப்படுத்துதல், கூட்டாக இணைந்து பணியாற்றுதல், முஸ்லிம் உலகிலே கருத்து ஒற்றுமையை மென்மேலும் உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு, பாலஸ்தீனம்  எதிர்நோக்கியிருக்கின்ற மிக மோசமான நிலைமை பற்றியும், அதனைத் தீர்க்கும் வகையில் இஸ்லாமிய உலகின் தலைமைகளும் இஸ்லாமிய அறிஞர்களும் இணைந்து பணியாற்றுவதனுடைய அவசியம் குறித்தும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...