24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

Date:

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (02) முதல் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த அறிவிப்பின்படி, பாதுக்கை, ஹோமகமை மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

பாதுக்கவில் இன்று (02) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதேநேரம், ஹோமகமையில் நாளை (03) 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

பெலன்வத்தையில் சனிக்கிழமை (04) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர்வெட்டு வெட்டு அமுலில் இருக்கும்.

தற்போது இலங்கையைப் பாதிக்கும் வறண்ட வானிலை காரணமாக, கலதுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நீர்வெட்டுக்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைக் கண்காணித்து நிர்வகிப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளரினால் ஒரு சிறப்புச் செயல்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு, தற்போதுள்ள நீர் ஆதாரங்கள், உற்பத்தித் திறன்கள் மற்றும் விநியோக முறைகளை தொடர்ந்து கண்காணிக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதிநிதிகள்!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட...

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல்: அரச செலவினங்களைக் குறைக்கப் புதிய கட்டுப்பாடு!

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தைச்...

பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்!

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83 ஆவது வயதில் காலமானார்...

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கத்தைப் பேணும்போது எவ்விதமான உடல் அல்லது மன...