A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

Date:

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (24) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2026 மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 விண்ணப்பங்கள் முற்றிலும் இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், இறுதி நேரத்திற்குப் பிறகு எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களைக் இறுதி நேரத்திற்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் அல்லது விளக்கம் தேவைப்படும் பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் 011-2785922, 011-2784208, அல்லது 011-2784537 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

விசாரணைகளை 011-2784422 என்ற தொலைநகல் எண்ணுக்கோ அல்லது gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...

மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு...

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...