ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை, ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை அன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்பட்டவுடன் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
