பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

Date:

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025/2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக பிரவேச கையேட்டினை (University Admission Manual) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதிவுசெய்யப்பட்ட புத்தகசாலைகளின் ஊடாக மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டின் மென்பொருளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk ஊடாக ஆன்லைன் முறையில் கொள்வனவு செய்யலாம்.

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இம்முறை 176,527 மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றுள்ளதோடு, இது மொத்த பெறுபேறுகளில் 62.64% ஆகும்.

Popular

More like this
Related

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம்...

2027ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம்...

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...