விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Date:

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

43 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அதி அவதான வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, 6 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவின் சமூக வைத்திய விசேட நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 26,071 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 13 மரணங்களும் பதிவாகியுள்ளன.

நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வு மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...