சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு சட்ட நடவடிக்கை

Date:

வீசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் குடிவரவு சட்ட மீறல்கள் மற்றும் கணினி குற்றங்கள் தொடர்பில்அதிகளவான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
அதனையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அண்மைக் காலங்களில் கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் சீன நாட்டவர்கள் என்றும், அந்த வகையில் இணைய வழியாக பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நாடளாவிய ரீதியில் 157 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய நாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொழும்பு புறநகர் பகுதியான ராஜகிரிய,மெத வெலிகட பகுதியில் தங்கியிருந்த 120 வெளிநாட்டவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம்...

இலங்கை – மாலைதீவு உறவில் புதிய மைல்கல்: 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட்...

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவு: முதல் முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக?

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்...

ஆட்சியை நெருங்கும் விஜய்: தமிழக வரலாற்றில் புதிய கட்சியான தவெக 115 இடங்களில் முன்னிலை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக 115 இடங்களில் முன்னிலை...