தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

Date:

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான இரண்டாம் சுற்று மேன்முறையீடுகளை (Appeals) சமர்ப்பிப்பது குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இரண்டாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.05.08 ஆம் திகதி முதல் 2026.05.29 ஆம் திகதி வரை நிகழ்நிலை (Online) முறைமையூடாகச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இனுள் பிரவேசித்து தமது மேன்முறையீடுகளை மேற்கொள்ளலாம்.

அல்லது http://g6application.moe.gov.lk எனும் இணைப்பினூடாக நேரடியாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தின் கீழ் ஒரு மாணவர் ஆகக்கூடியது 3 பாடசாலைகளுக்கு மாத்திரமே மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...

LPL தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை...