meningitis வைரஸ் குறித்து பாடசாலைகளுக்கு விசேட அறிவுறுத்தல்

Date:

தற்போது பரவி வரும் என்டரோ வைரஸினால் ஏற்படும் மெனின்ஜயிடிஸ் நோய் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதற்கமைய கல்வியமைச்சிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நோய் பரவாமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வியமைச்சு பாடசாலைகளுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மெனின்ஜயிடிஸ் நோய் வைரஸ் ஊடாக பரவும் நோயாகும். இது சிறுவர்கள் உட்பட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களை அதிகமாக தாக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்கத்திற்க உள்ளான சிலர் கடந்த ஏப்ரல் மாதம் மாத்தறை தெனியாய பகுதியில் அடையாளம் காணப்பட்டனர். தற்போது நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் நோய் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பாடசாலை மாணவர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் மாணவர்கள் மத்தியில் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...