அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று (19) தொடங்கப்படவுள்ளது.
FitsAir நிறுவனத்தால் இயக்கப்படவுள்ள இந்த புதிய வழித்தடமானது, குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தையும் கொழும்பையும் வாரத்திற்கு மூன்று முறை இணைக்கும்.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பின்னர், இவ்விரு நகரங்களுக்கு இடையிலான முதல் நேரடி விமானச் சேவையாக இது அமைகிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் பயணத் தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சி எனத் தொழில்துறை பங்குதாரர்கள் விவரிக்கும் இந்த முன்னெடுப்பை, சின்னமன் ஹோட்டல்ஸ் மற்றும் வாக்கர்ஸ் டூர்ஸ் நிறுவனங்கள் எளிதாக்கியுள்ளன.
இந் நிலையில் இவ்விரு நகரங்களுக்கு இடையிலான புதிய போக்குவரத்து இணைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்தத் தொடக்க விமானச் சேவையின் அறிமுக விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவும் இடம்பெறுவார்.
