அங்குருவாத்தொட்ட, படாகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், அதன் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைகளின்படி, குறித்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 71 பேரில், 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
