ராபிதத்துன் நளீமிய்யீன் அமைப்பின் 11ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்: அல்ஹாஜ் யாகூத் நளீம் பிரதம அதிதி.

Date:

ராபிதத்துன் நளீமிய்யீன் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் 11ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஜாமிஆ நளீமிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் ஆரம்பமாகும் அமர்வுகள் ராபிதத்துன் நளீமிய்யீன் தலைவர் சட்டத்தரணி அஷ்-ஷெய்க் ரி. ஷாகிர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளன.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் அவர்கள் பிரதம அதிதியாக கலத்து கொள்வதோடு கலாபீடத்தின் முதல்வர் அஷ்- ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் கெளரவ அதிதியாக கலந்துகொள்வார்.

இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்நிகழ்வின் முதல் அமர்வு அங்குரார்ப்பண நிகழ்வாக அமையவிருப்பதுடன், இரண்டாவது அமர்வில், ராபிதாவின் புதிய யாப்பு மாற்றத்தை அங்கீகரித்தல், 2026–2029 காலப்பகுதிக்கான மத்திய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல், பிராந்திய செயற்குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பித்தல் மற்றும் புதிய தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகப் பொறுப்பாளர்களை அறிவித்தல் ஆகிய முக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள நளீமியாவின் பழைய மாணவர்கள் பங்குபற்ற உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அரகலய’ (Aragalaya) போராட்டக் காலத்தின்போது, ​​சமூக...

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு: பசுமைச் சூழலை உருவாக்கச் சிறப்பு நடவடிக்கை!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில், புத்தளம்...

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: இதுவரை 79,016 நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் டெங்கு நோய் அதி தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில்,...