ராபிதத்துன் நளீமிய்யீன் அமைப்பின் 11ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்: அல்ஹாஜ் யாகூத் நளீம் பிரதம அதிதி.

Date:

ராபிதத்துன் நளீமிய்யீன் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் 11ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஜாமிஆ நளீமிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் ஆரம்பமாகும் அமர்வுகள் ராபிதத்துன் நளீமிய்யீன் தலைவர் சட்டத்தரணி அஷ்-ஷெய்க் ரி. ஷாகிர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளன.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் அவர்கள் பிரதம அதிதியாக கலத்து கொள்வதோடு கலாபீடத்தின் முதல்வர் அஷ்- ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் கெளரவ அதிதியாக கலந்துகொள்வார்.

இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்நிகழ்வின் முதல் அமர்வு அங்குரார்ப்பண நிகழ்வாக அமையவிருப்பதுடன், இரண்டாவது அமர்வில், ராபிதாவின் புதிய யாப்பு மாற்றத்தை அங்கீகரித்தல், 2026–2029 காலப்பகுதிக்கான மத்திய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல், பிராந்திய செயற்குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பித்தல் மற்றும் புதிய தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகப் பொறுப்பாளர்களை அறிவித்தல் ஆகிய முக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள நளீமியாவின் பழைய மாணவர்கள் பங்குபற்ற உள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...