ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 42,810 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த வருகையில் 18 சதவீதமாகும் (18%).
மேலும், இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,922 பேரும், பிரான்ஸிலிருந்து 3,908 பேரும், சீனாவிலிருந்து 3,031 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,2228 ஆக அதிகரித்துள்ளது.
இதில் இந்தியாவிலிருந்து 346,057 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 பேரும், சீனாவிலிருந்து 91,538 பேரும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
