நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கமைய இன்று இரவு 11 மணி வரை எச்சரிக்கை அமுலில் இருக்கும். கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை மற்றும் ஆற்று மேற்பகுதி கோரளை பிரதேச செயலாளர் பிரிவுகள் உட்பட அதனை அண்மித்த பகுதிகளுக்கு 2ம் கட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
