நாமலின் உரையை ரத்து செய்த ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் யூனியன்

Date:

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ லண்டன் ஒக்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஸ் சங்கங்களில் நடத்தவிருந்த உரை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவரின் உரை தொடர்பான நிகழ்வுகளை குறித்த சங்கங்கள் ரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனிலுள்ள தமிழ் மாணவ குழுக்களின் எதிர்ப்பினையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உரை நிகழ்வுகளை முன்னிட்டு நாமல் ராஜபக்ஷ, அவரது பாரியார் உட்பட மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் லண்டன் பயணித்துள்ளனர். ஏற்கனவே கேம்பிரிட்ஜ் யுனியன் நாமலின் உரை தொடர்பான நிகழ்ச்சி திட்டமிடலை ரத்து செய்திருந்தது.

மாணவர்களின் போராட்டம் காரணமாக பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வறான உரையின் போது மாணவர்களிடமிருந்து நேரடியான, வெளிப்படையான கேள்விகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

இந்நிலையில் எதிர்ப்பு காரணமாக நிகழ்வின் நோக்கம் சரியான முறையில் நிறைவேறாது என்ற தீர்மானத்திற்கு வந்த நிலையில் நாமலின் உரை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்தியாவின் உயர்மட்ட ஆன்மீகத் தூதுக் குழுவினர் இலங்கை வருகை.

அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைஷானந்த் கிரி மஹராஜ் (Kaishanand...

ரமழான் சிந்தனை: குர்ஆன் கூறும் ஞானம்: வாழ்வின் நோக்கம், ஈமானிய வாழ்வு மற்றும் பணிவு.

வாழ்க்கை என்பது ஒரு குறுகிய பயணம். அந்தப் பயணத்தை எவ்வாறு வடிவமைக்க...

புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகொலை: 16 வயது சிறுவன் கைது!

புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மிகக் கொடூரமாகக்...

உலகில் தேடப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னர் எல் மென்சோ சுட்டு கொலை: மெக்சிகோவில் உச்சக்கட்ட பதற்றம்!

உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ, மெக்சிகோவில்...