புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகொலை: 16 வயது சிறுவன் கைது!

Date:

புத்தளம் – அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவனைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புத்தளம், தில்லையடி ரத்மல்யாய 4-ம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த ஆதம் பாவா அப்துல் லதீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நேற்று (பெப்ரவரி 21) இரவு 9.00 மணியளவில் தனது சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்ற அப்துல் லதீப், வீடு திரும்பாத நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்தார்.

தில்லையடி, ரத்மல்யாய – அல்காசிமி சிட்டி பிரதான வீதியூடாக கல்லடி நோக்கிச் செல்லும் உள்வீதியில் உள்ள தோட்டப்பகுதிக்கு அருகில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இக்கொலையைச் செய்த சந்தேகநபர், சாரதியிடமிருந்த பணத்தைத் திருடிக்கொண்டு, அவரது முச்சக்கர வண்டியையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணைகளைத் தீவிரப்படுத்திய புத்தளம் காவல்துறையினர், ரத்மல் ஓயா பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரால் கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டி அல்காசிமி சிட்டியின் பின்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் எதற்காக இக்கொலையைச் செய்தார் மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இவர் சிரேஷ்ட ஒளிபரப்பாளர் A.L. இர்பான் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...