இந்தியாவின் உயர்மட்ட ஆன்மீகத் தூதுக் குழுவினர் இலங்கை வருகை.

Date:

அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைஷானந்த் கிரி மஹராஜ் (Kaishanand Giri Maharaj) தலைமையிலான 14 பேர் கொண்ட உயர்மட்ட ஆன்மீகத் தூதுக்குழு இன்று (23) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, மன்னார் திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், திருகோணமலை கோணேஸ்வரம், நுவரெலியா சீதா அம்மன் கோவில் மற்றும் பொலன்னறுவையின் பண்டைய சிதைவுகள் ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தருகின்றனர்.

இந்தியர்களின் மத வாழ்வில் சிவ வழிபாடு முக்கிய இடம் வகிப்பதால், இந்திய சிவ பக்தர்களையும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளையும் இலங்கையின் புனித மரபுகளை தரிசிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆரம்பகட்ட முயற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் மீண்டும் தேர்வு!

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அந்நாட்டின் தலைவர்...

ரமழான் சிந்தனை: குர்ஆன் கூறும் ஞானம்: வாழ்வின் நோக்கம், ஈமானிய வாழ்வு மற்றும் பணிவு.

வாழ்க்கை என்பது ஒரு குறுகிய பயணம். அந்தப் பயணத்தை எவ்வாறு வடிவமைக்க...

புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகொலை: 16 வயது சிறுவன் கைது!

புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மிகக் கொடூரமாகக்...

நாமலின் உரையை ரத்து செய்த ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் யூனியன்

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ லண்டன் ஒக்போர்ட் மற்றும்...