துபாயில் இடம்பெற்ற ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ நூல் வெளியீட்டு விழாவும் இப்தார் நிகழ்வும் முக்கிய விருதுகளும் வழங்கி வைப்பு.

Date:

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு தமிமுன் அன்சாரி அவர்கள் 2016 முதல் 2021 வரையான காலப்பகுதியில் தமிழக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் காத்திரமான தொகுப்புக்கள் அடங்கிய ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ என்ற நூல் வெளியீட்டு விழா துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

‘இதயங்களை இணைக்கும் இப்தார்” நோன்பு துறக்கும் நிகழ்வாகவும் சமூக நல்லிணக்க ஒன்று கூடலாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் பொதுச் செயலாளர் எம்..முஹம்மது நாசர் நூல் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார்.

நிகழ்வில் துபாய் அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றதுடன் அவர்களது சார்பில் பேசிய பக்கர் சித்திகி , துபாய் மண்ணில் இது போன்ற சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நடைபெறுவது பாராட்டத்தக்கது என்றார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக பல்வேறு துறைகளில் சமூகத்துக்காக பங்காற்றியமைக்காக பின்வருவோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

டாக்டர் அன்சாரி,பி.எஸ் அப்துர் ரஹ்மான், முஹமது பைஸ், ஏ. ஹமீத் யாசிர், ஏ.கௌசர் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். மஜக தலைவர் அவர்கள் தமிமுன் அன்சாரி இந்த விருதுகளை வழங்கி வைத்தார்.

ரமழான் கால இப்தார்கள் இது போன்ற அர்த்தமுள்ள நிகழ்வுகளாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு...

வரி விதிப்பு: உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின்...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள்!

6 வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல...

இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம்

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William...