ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Date:

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் துபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதன்படி, ரியாத்துக்கான தினசரி விமான சேவைகள் இன்று இரவும், டுபாய்க்கான சேவைகள் நாளையிலிருந்தும் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

மத்திய கிழக்கின் நிலைமைகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இயக்கப்படவுள்ள விமானங்களின் விபரங்கள் பின்வருமாறு:

UL265   Colombo–Riyadh   18:15 hrs

UL266   Riyadh–Colombo   22:35 hrs

UL231   Colombo–Dubai 1  2:40 hrs

UL232   Dubai–Colombo   17:00 hrs

மேலதிக விபரங்களுக்கு பொதுமக்கள் www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...