விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

Date:

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த பஸ் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும். நாட்டின் பொது போக்குவரத்து துறையில் விசேட தேவையுடையவர்களுக்கான போக்குவரத்து உரிமைகளை வழங்கும் வகையில் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக் காலமும் இதுபோன்றதொரு சந்தர்ப்பம் குறித்த சமூகத்தினருக்கென பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

சக்கரை நாற்காலி பயன்படுத்தும் விசேட தேவையுடையவர்கள் இலகுவாக ஏறக்கூடிய வகையில் 430.7 மில்லியன் ரூபா செலவில் பிரத்தியேக மிதி பலகையைக் கொண்டதாக இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குளிரூட்டப்பட்ட குறித்த 10 பஸ் வண்டிகள் நாட்டை வந்தடைந்துள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட குறித்த பஸ் வண்டிகள் மெட்ரோ நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...