மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

Date:

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 மார்ச் 19 மற்றும் 20, ஆகிய திகதிகளில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

UL253/UL254 (கொழும்பு–தமாம்), UL217/UL218 (கொழும்பு–டோஹா) மற்றும் UL229/UL230 (கொழும்பு–குவைத்) ஆகிய விமானச் சேவைகள் 2026 மார்ச் 28 இவரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகள், புதுப்பிப்புகளுக்காக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாக விமான நிலவரங்களைத் தவறாமல் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் உதவிக்குத் தங்களது உலகளாவிய தொடர்பு மையத்தையோ அல்லது தத்தமது பயண முகவர்களையோ தொடர்புகொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...