மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 மார்ச் 19 மற்றும் 20, ஆகிய திகதிகளில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
UL253/UL254 (கொழும்பு–தமாம்), UL217/UL218 (கொழும்பு–டோஹா) மற்றும் UL229/UL230 (கொழும்பு–குவைத்) ஆகிய விமானச் சேவைகள் 2026 மார்ச் 28 இவரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள், புதுப்பிப்புகளுக்காக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாக விமான நிலவரங்களைத் தவறாமல் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
