லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம்: ஈரான் எச்சரிக்கை.

Date:

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட  பிறகு,நேற்று புதன்கிழமை  மத்திய பெய்ரூட்டில் உள்ள பரபரப்பான வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் முன் அறிவிப்பின்றி நடத்தப்பட்டன.

இதில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் லெபனான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்ந்தால், ஒப்பந்தத்திலிருந்து விலக வேண்டியிருக்கும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வது தடுக்கப்பட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் எந்தக் கப்பலையும் அழித்துவிடுவோம் என்று புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும் ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காசாவில் அல் ஜசீரா செய்தியாளர் முகமது விஷாஹ் கொ*லப்பட்டார்: பத்திரிகையாளர்கள் பலி எண்ணிக்கை 262 ஆக உயர்வு.

அல் ஜசீரா முபாஷர் (Al Jazeera Mubasher) தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது...

சில பகுதிகளில் பிற்பகலில் மழை: நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா...

கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15...