இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் நாடு திரும்பினர்

Date:

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும் செவ்வாய்க்கிழமை (14) விசேட ஏற்பாடுகளின் கீழ் அவர்களது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

IRIS Dena என்ற கப்பல் இலங்கை கடற்பரப்புக்கு அருகில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கித் தாக்குதலுக்கு உள்ளானபோது அதிலிருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படை வீரர்களும், மேலும் IRIS Bushehr கப்பலில் இருந்த 204 மாலுமிகளும் இதில் அடங்குகின்றனர்.

காயமடைந்த நிலையில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட இவர்கள் பின்னர் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மொத்தம் 236 ஈரானியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தாயகம் திரும்பியுள்ளனர்.
இவர்களை அழைத்துச் செல்ல Meraj Airlines நிறுவனத்திற்குச் சொந்தமான ‘Iran-09’ என்ற விசேட விமானம் பயன்படுத்தப்பட்டது.

இந்த விமானம் நேற்று மாலை சுமார் 4.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.

பின்னர், வெலிசறை தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 204 பேரும், கொக்கல தடுப்பு மையத்தில் இருந்த 32 பேரும் விமானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, இந்த விசேட விமானம் இரவு 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு, Iran நாட்டில் பெயர் வெளியிடப்படாத ஒரு விமான நிலையத்தை நோக்கி பயணித்தது.

இந்த நடவடிக்கை, சர்வதேச மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...

தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...