சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு சட்ட நடவடிக்கை

Date:

வீசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் குடிவரவு சட்ட மீறல்கள் மற்றும் கணினி குற்றங்கள் தொடர்பில்அதிகளவான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
அதனையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அண்மைக் காலங்களில் கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் சீன நாட்டவர்கள் என்றும், அந்த வகையில் இணைய வழியாக பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நாடளாவிய ரீதியில் 157 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய நாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொழும்பு புறநகர் பகுதியான ராஜகிரிய,மெத வெலிகட பகுதியில் தங்கியிருந்த 120 வெளிநாட்டவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...