ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை.

Date:

ஈரானுடனான அண்மைய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கடந்த 24 மணி நேரத்தில் நாங்கள் மிகவும் நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம், மேலும் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது – என்றார்.

புதன்கிழமை பிற்பகுதியில், குடியரசுக் கட்சி ஆளுநர் வேட்பாளர் ஒருவருக்கான காணொளிக் கூட்டத்தின்போது ட்ரம்ப், ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்றும் உறுதியளித்தார்.

அதேநேரம், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்குவதாகவும் ட்ரம்ப் அச்சுறுத்தினார்.

இந்த நிலையில், அமெரிக்கா முன்வைத்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும், தெஹ்ரான் தனது கருத்துக்களை இறுதி செய்த பின்னர் மத்தியஸ்தரான பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்

Popular

More like this
Related

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...

நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...