வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத் அறிமுகப்படுத்தியுள்ளது.
வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளை விவரிக்கும் சுற்றறிக்கையை குவைத்தின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போது இலங்கை உட்பட 10 நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இத்துறையை ஒழுங்குபடுத்துவதையும், ஆட்சேர்ப்பு செயல்முறையை நெறிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திருத்தப்பட்ட தொழிலாளர் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் ஆளுநரக அளவிலான சேவை மையங்கள் மூலம் கையாளப்படும் என்றும், இது விண்ணப்பங்களை எளிமையாக்கி ஒழுங்கமைக்கும் நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை என்றும் குவைத் அதிகாரிகள் தெரிவித்தனர்.
