சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை 070 250 9509 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும்.
இந்த தகவல் பரிமாற்ற செயன்முறைகளின் போது விடயங்கள் மற்றும் சாட்சிகளுடன் கூடிய ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டள்ளது.
இதன்மூலம் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகச் சரியான, அறிவியல் ரீதியான மற்றும் துரித பதிலை வழங்க முடியுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
