இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களைத் தேர்வு செய்வதற்கான இணையதளப் பதிவு, எதிர்வரும் ஆகஸ்ட் 10 திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இணையதளம் திறக்கப்படும் நேரம்: ஆகஸ்ட் 10, பிற்பகல் 12:00 மணிக்கு (4,000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்படுவர்).
25 – 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் மட்டும்.
குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பாடசாலைக் கல்வி நிறைவு செய்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசக்கூடிய நல்ல உரையாடல் திறன் அவசியம்.
உணவக சமையலறையில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
எடைகளைத் தூக்குதல், நீண்ட நேரம் நின்று வேலை செய்தல், பாத்திரங்களைக் கையால் கழுவுதல் போன்ற பணிகளைச் செய்யக்கூடிய நல்ல உடல்தகுதி மற்றும் மன ஆரோக்கியம் தேவை. உணவுகள் அல்லது துப்புரவுப் பொருட்களால் ஒவ்வாமை (Allergy) இருக்கக்கூடாது.
2. புனரமைப்புத் துறை (Renovation Sector)
இணையதளம் திறக்கப்படும் நேரம்: ஆகஸ்ட் 10, பிற்பகல் 2:00 மணிக்கு (4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 12,000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்படுவர்).
வேலைப்பிரிவுகள் (பிரிவுக்கு 3,000 பேர்) புட்டி மற்றும் ஜிப்சம் போர்டு வேலைகள் (Putty & Gypsum work)
பிளக் கல் சுவர்கள் மற்றும் எலெக்ட்ரிக் பாக்ஸ் பொருத்துதல் (Sunk box & block stone building work)
பூச்சு வேலைகள் (Plastering work)
செராமிக் டைல்ஸ் பதித்தல் (Ceramic tiling work)
25 – 45 வயதிற்குட்பட்டவர்கள்.
கல்வி மற்றும் மொழியறிவு: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாடசாலைக் கல்வி நிறைவு செய்திருக்க வேண்டும். அடிப்படை ஆங்கில அறிவு அவசியம்.
பொதுவான நிபந்தனைகள் மற்றும் தகுதிகள்:
விண்ணப்பதாரர் இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக் கூடாது.
விண்ணப்பதாரரின் பெற்றோர், மனைவி அல்லது பிள்ளைகள் தற்போது இஸ்ரேலில் பணிபுரிபவர்களாக இருக்கக்கூடாது.
புனரமைப்புத் துறைக்கான இறுதித் தேர்வில் தேர்ச்சியடையாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. எனினும், இஸ்ரேலின் பிற துறைகளுக்கு விண்ணப்பித்துத் தகுதியுடையவர்கள் இந்தப் புனரமைப்புப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுகளை இஸ்ரேலியப் பிரதிநிதிகளே நேரடியாக நடத்துவார்கள். எனவே, உண்மையான தொழில் அனுபவமும் தகுதியும் உள்ள துறைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
