தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகளை சலுகைத் திட்டத்தின் கீழ் வழங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் தலைவர் ஆனந்த லால் ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், துபாயில் நடைபெற்று வரும் விமான நிலைய நிர்மாணத் திட்டங்களில் தற்போது 2,000 வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
இந்த வேலைகளை அதிகபட்சமாக 150,000 ரூபாய் செலவில் விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், 800 மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களும் உள்ளதாகவும், அவற்றுக்கான அனைத்து செலவுகளும் உட்பட அதிகபட்சமாக 180,000 ரூபாய் மட்டுமே அறவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இலங்கையைச் சேர்ந்த பட்டதாரிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நலன்புரி (Wellness) மையத்தில் எந்தவித செலவுமின்றி வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்றும், அதற்கான அனைத்து செலவுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
ஜப்பானில் மூன்று நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஹெட்டியாராச்சி கூறினார்.
