ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

Date:

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலகப் புகையிரதங்களும் தற்போது வழமைபோன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் ஊடகப் பேச்சாளரும், புகையிரதப் போக்குவரத்து அத்தியட்சகருமான அசங்க சமரசிங்க தெரிவிக்கையில், ஒரு புகையிரதத்தைத் தவிர ஏனைய அனைத்துப் புகையிரதங்களையும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழிற்சங்கங்கள் தற்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணிநேரத்திற்கு இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, நேற்றை தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பல ரயில் சேவைகள் முடங்கியதாக தெரிவித்தார்.

இதனால் பல பணியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் தமது கோரிக்கைகள் குறித்து உடன் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஒரு சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது...

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...