நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை இரத்துச் செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பான உத்தரவு, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (18) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த மனு தொடர்பான உத்தரவு செப்டம்பர் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
