வடக்கு மாகாண ரீதியில் வவுனியாவில் குத்துச்சண்டை பயிற்சி பட்டறையும் | சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

Date:

வடக்கு மாகாண ரீதியில் வவுனியாவில் குத்துச்சண்டை பயிற்சி பட்டறையும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது.

வடக்கு மாகாண பிரேஞ் சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் இப்பயிற்சி பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

இலங்கை பிரேஞ் சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவரும், சர்வதேச தலைமை பயிற்றுவிப்பாளருமாகிய சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க வளவாளராக கலந்துகொண்டு வடக்கு மாகாண வீர, வீராங்கனைகளுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

அத்துடன் அமைப்பின் பிரதித்தலைவர் காசன் ஜெயசேகர, செயலாளர் பாரீஸ் மௌலானா, பொருளாளர் சரீட் சோனல் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 வீர, வீராங்கனைகளுக்கு கிக் பொக்சிங் பயிற்சி பட்டறையானது 13-02-2021 மற்றும் 14-02-2021 வரை நடைபெற்று நேற்று மாலை பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் பிரதித் தலைவர் கெ.குமாரசாமி, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், சமூகசேவையாளர் எஸ்.கஜேந்திரகுமார், வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கெ.கமலன், வர்த்தகரும், சமூக ஆர்வலருமான எஸ்.ரூபன் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் ஆர்.சுவிதர் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியிருந்தனர்.

வவுனியா நிருபர்
கோகுலன்

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...