பதுளை பகுதியில் தொடர் நிலஅதிர்வுகள் | மக்களுக்கு எச்சரிக்கை

Date:

பதுளை − மடூல்சீமை பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாய நிலைமை காணப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது.

மடூல்சீமை − எகிரிய பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்ந்ததை அடுத்தே, பணியகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த பகுதியில் 1.5 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவாகியிருந்தது.

இதற்கு முன்னரும் குறித்த பகுதியில் இருவேறு சந்தர்ப்பங்களில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.

இந்த நிலஅதிர்வு குறித்து புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அதிகாரிகள் பிரதேசத்திற்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக, குறித்த பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்தே, மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயமும், மண்மேடுகள் சரிவதற்கான அபாயமும் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...