நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த பேராயர்

Date:

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை தான் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்திக்கப்போவதில்லை என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்த கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவாரம் பேராயரை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.

எனினும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை பேராயர் எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திக்கமாட்டார் என பேராயரின் ஊடகப்பேச்சாளர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இதேவேளை உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மீள் மதிப்பீடு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழுவை பேராயர் நிராகரித்துள்ளார்.

எனினும் குறித்த ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழு முதற் தடவையாக இன்றையதினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...