உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்

Date:

உளுந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உளுந்து செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை உடன் சந்தைப்படுத்துமாறு வவுனியா மாவட்ட கமக்காரர் ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் உளுந்தின் கேள்வியைக் கருத்திற்கொண்டு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இறக்குமதியாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இறக்குமதியாளர்களினால் விதியோகிக்கக் கூடிய உச்ச விலையானது 640/- வரை இருக்கலாமென அறியப்படுகின்றது. இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் உளுந்தின் சில்லறை விலை 750-800/- ரூபாய்க்கு இடைப்பட்டதாகவே இருக்கும். எனவே உளுந்தை சந்தைக்கு விடாது அதிக விலைக்கு விற்க காத்திருக்கும் விவசாயிகள் எதிர்காலத்தில் நட்டமடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
இதேவேளை விதை உளுந்துச் செய்கைக்காக விதையினை விதைகள் உற்பத்தித் திணைக்களத்தில் பெற்ற விவசாயிகள் மீள விதை உளுந்தை தரத்தின் அடிப்படையில்  870 – 920 /-  விற்கு குறித்த திணைக்களத்திற்கு விற்க இயலும்.
இதுவரை விதை உளுந்திற்கான தேவையின் 1/3  கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விதை உளுந்துகளை மீளச் செலுத்தாதவர்களுக்கான சலுகைகள் எதிர்காலத்தில்  மட்டுப்படுத்தப்படும் என்பதனையும் குறித்த திணைக்களம் கவனத்திற்கு கொண்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நிருபர் 

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...